ஈழப் பிரைச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுமா?

இறுதியாக ஐரோப்பிய ஒன்றியமும் த.வி.புலிகளைத் தடை செய்தாகிவிட்டது. புலிகள் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அமேரிக்கா, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து வரிசையில் இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் இனைந்து கொண்டுள்ளது.

2002 ல் அரசும் புலிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது இருந்த நிலையைவிட இப்போது புலிகளுக்கு அரசியல் நெருக்கடி அதிகமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் புலிகள் பெற்றதைவிட இழந்ததே அதிகம் எனலாம். கருணா அம்மானின் பிரிவு, சர்வதேச நாடுகளின் தடை என பட்டியல் மோசமாக நீள்கின்றது.

தீவிரவாதத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் வேறுபடுத்திப் பார்க்க தவறிவிட்டது என்றேதான் சொல்ல வேண்டும். தமிழர்கள் கூட்டம் கூட்டமாக கொண்றழிக்கப்படும்போது கண்மூடி இருக்கும் சர்வதேசம் தமிழர் தரப்பு விடும் ஒரு சிறு பிழையைம் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. தேவாலயங்கள் மீது இராணுவ விமானங்கள் குண்டு வீசுகின்றன, தாயை அணைத்தபடி சேய்... இருவரும் உயிரற்ற சவங்களாக. இப்படி எத்தனை கொடூரங்கள் அரங்கேறிவிட்டன?. ஏதொ இவையெல்லாம் மீண்டும்மேரர் தடவை அரங்கேறப் போவதாகவே எம்மவர் ஊகிக்கின்றனர்.

இலங்கையில் தீர்வு ஒற்றை ஆட்சியின் கீழ்தான் என்று மகிந்த இராஜபக்ஸ தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் புலிகள் கடைசிவரைக்கும் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுகாண ஒத்துக்கொள்ளப்போவதில்லை. குறைந்த பட்சம் சுயட்சிமுறை, இல்லாவிட்டால் யுத்தம் தான் பதில். அதுதான் முறையும் கூட. ஏனெனில் சுமார் 18 000 போராளிகளின் கல்லறைகளுக்கு அதுதான் ஆறுதல் அளிக்கும்.

ஈழத்தில் தமிழர்கள் படும் அவலத்திற்கு இப்போது நம் தொப்புள் கொடி உறவுகள் குரல் கொடுக்க முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. முதல்வர் கருனாநிதி தொடக்கம் ஜெயலலிதாவரை ஈழத் தமிழர்பால் அன்பு கொள்ளத் தொடங்கிவிட்டனர். முக்கிய காரணம் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்காண தமிழர்களின் உணர்வுகளை தமிழகமோ இந்தியாவோ புறந்தள்ள முடியாது. ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கும் தார்மீகக் கடமை இந்தியாவிற்கு உண்டு, அதை இந்தியா மறுக்க முடியாது.

தற்போதுள்ள நிலமைகளை ஆராய்ந்து பார்த்தால் இந்தியா இலங்கைப் பிரைச்சனையில் தலையிட வேண்டும் என்று தமிழ் தரப்புகளும் சரி சிங்களத் தரப்பும் சரி விரும்புகின்றன. ஆயினும் இருவரது எதிர்பார்ப்புகளும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரும் இந்தியா தமக்க ஆதரவாக இயங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்தியா தமிழர்களிற்கு எதிராக செயற்பட்டு தமிழக தமிழர்களின் நம்பிக்கையை இழக்க விரும்பாது. அதே வேளை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு ஈழம் கொள்கைக்கு ஆதரவாகவும் செயற்படப்போவதில்லை. இன்னுமொரு பரவலான கருத்துண்டு அதுதான் இந்தியா தன் நாட்டிலுள்ள சுயாட்சி முறைமையை விட அதிகாரம் கூடிய சுயாட்சி முறை இலங்கையில் அமைய ஆதரவளிக்காது என்பது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை இப்போது கூற முடியாது ஆனால் இதில் உண்மையில்லாமல் இல்லை. இந்திய மாநிலங்களை விட அதிகாரம் கூடிய மாநிலம் ஒன்று இலங்கையில் தோண்றுமாயின் அதைப் பார்த்து இந்திய மாநிலங்களும் கூடுதல் அதிகாரம் கோரலாம் என்பதே அது. ஈழக் கொள்கையை இந்தியா எதிர்ப்பதற்கும் இதுவே முக்கியகாரணம். இதனால் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் ஒர ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதை ஈழத் தமிழர் பால் திணிக்க முனைந்தது ஆயினும் அது செல்லாமல் போனதுதான் உண்மை.

இவற்றிற்கு முன்னால் ஒன்றை நாம் பார்க்கவேண்டும் இலங்கை பேச்சுக்களில் இந்தியா தொடர்ந்தும் பார்வையாளராக இருக்குமா என்பதே. இந்தியா அப்படியான ஒரு தோற்றத்தையே கடந்த சில வருடங்களாக காட்டி வருகின்றது. அப்படி இந்தியா வருமானால் நோர்வேயின் பங்கு என்ன?.

என்கணக்குப்படி இந்தியா நீண்ட நோக்கில் இலங்கை பிரச்சனையில் தலையிடத்தொடங்கிவிட்டது. தற்போது நோர்வே பேச்சு வார்த்தை முயற்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டு வருவதைக் காணலாம். அடுத்த கட்டமாக இந்தியா நேரடியாக தலையைப் போட்டாலும் அதிசயப்படுவதற்கில்லை. ஏனெனில் இலங்கையில் மேற்குலக ஆதிக்க சக்திகள் நிலையூண்டுவதை இந்தியா இம்மியளவும் விரும்பாது. அது இந்தியாவின் பிராந்திய அரசியல் ஸ்திரத்தை குலைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே இந்தியா இலங்கையில் அமேரிக்க தலையீட்டை போதுமான அளவு தடுத்துள்ளது. திருகோணமலை எண்னைக்குதங்களை இந்தியா பெற்றுக்கொண்டுள்ளது இதனால் இலங்கையின் அல்லது தெற்காசியாவின் பாதுகாப்பான இயற்கைத்துறைமுகம் இந்தியா கையில். பெற்றோலிய வினயோகத்தில் அறுபது விழுக்காடு இந்தியன் ஒயில் கம்பனியே வைத்திருக்கின்றது. இந்தியாவின் ICIC வங்கி இலங்கையிலும் காலூன்ற தொடங்கிவிட்டது. ஆகவே இந்தியா ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் அரசியல் காரணிகளில் தலையிடத் தொடங்கிவிட்டது. விரைவில் நேரடியாக இனப்பிரைச்சனை விவகாரத்திலும் தலையிடுமா???? காலந்தான் பதில் சொல்லும்.

5மறுமொழிகள்:

Blogger CAPitalZ மொழிந்தது...

நல்ல ஆய்வு.

_______
CAPital
http://1paarvai.wordpress.com/

7:59 pm  
Blogger ரவி மொழிந்தது...

காத்திருப்போம்...காலம் கனியும்வரை...

வாருங்கள் வலைப்பதிவு உலகிற்க்கு..

9:02 pm  
Blogger ancient clown மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

11:16 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

உங்கள் ஆய்வு சரி; இன்று" பி பி சி- இணையப் பதிப்பில் இந்து- ராம்; ஏற்கனவே துக்ளக் சோ; ஆப்பு வைக்கக் காத்திருக்கிறார்களே!
பார்ப்போம்
யோகன் பாரிஸ்

3:26 pm  
Blogger Jay மொழிந்தது...

பதிலிட்ட அனைவருக்கும் நன்றிகள்....

2:48 pm  

Post a Comment

<< முகப்பு