NanoTechnology - நனோதொழில்நுட்பம்

எனது பொறியியல் பீட நண்பர்களுடன் பேசும் போது ஏதோ நனோ டெக்னாலஜி என்று பேசிக்கொண்டனர். எனக்கு அது என்ன என்று புரியவில்லை. என்ன என்று கேட்டபோது அவர்கள் “உங்களமாதிரி கம்பியூட்டரோட குப்பகொட்டப்போற பசங்களுங்க அதெல்லாம் தேவையில்லை. நீ போய் பேசாம ஜாவாவை வைத்து ஏதாவது பண்ணப்பாரு”.

ஆர்வம் தாங்காது நான் இணையத்தில் கிண்டியதில் கிடைத்த விடயம் இவை. சத்தியமாக இது ஆழமான கட்டுரையாக எனக்கு தோன்றவில்லை. இங்கு நனோ டெக்னாலஜி பற்றிய ஓர் அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்புகின்றேன். மொழி எக்காரணம் கொண்டும் தமிழர்களிற்கு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதே என்விருப்பம்.

நனோ டெக்னாலாஜி எனப்படுவது வடிவமைப்பு, பண்பு, தயாரிப்பு மற்றும் பிரையோக வடிவமைப்புகள், கருவிகள் என்பவற்றை நனோ அளவிடையில் கையாள்வதே. ஒரு நனோ மீற்றர் என்பது எட்டு தொடக்கம் பத்து வரையான அணுக்களின் சேர்க்கையாக அமைக்கின்றன. சாதாரணமாக மனித தலைமுடி 70,000 முதல் 80,000 நனோ மீற்றர் தடிப்புடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நனோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே நனோ தொழல் நுட்பங்கள் என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் நனோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், இரசாயணவியல், பெளதீகவியல், அல்லது ஏதாவது விஞ்ஞாணத் துறை அல்லது இவற்றின் சேர்க்கை போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

கருவிகளை சிறிதாக்கும் தேடலில் atomic force microscope (AFM) and the scanning tunneling microscope (STM) போன்ற கருவிகள் விளைவாகக் கிடைத்தன. இவை குளப்பமானதும் வினைத்திறனானதுமமான electron beam lithography உடன் சேர்ந்து அணுக்களை ஒழுங்கு படுத்தவும் அதன் மூலம் அமைப்புகளை உருவாக்கவும் உதவி புரிகின்றன.

இது பற்றி முதலில் டிசெம்பர் 29, 1959 ல் பொளதீகவியல் ஆய்வாளர் றிச்சாட் ஃபென்மான் ஒரு உரையை நிகழ்த்தினார். அதன் தலைப்பு "There's Plenty of Room at the Bottom,". இந்த தொழில் நுட்பத்தால் பொளதீகவியல் பிரயோகங்களில் மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போவதுடன் மேற்பரப்பு இழுவிசை மற்றும் வன்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

நனோ தொழில் நுட்பம் என்ற பதம் முதலில் டோக்கியோ விஞ்ஞானப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நொரியோ டாரிகுசி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 களில் இந்த கருத்து மேலும் டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவரே நனோ தொழில் நுட்பத்தை பேச்சுக்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.

1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நனோ தொழில் நுட்பம் வளர்ச்சி அடையத்தொடங்கியது.
*cluster science பிறப்பு
*scanning tunneling microscope (STM) இன் கண்டு பிடிப்பு

இந்த தொழில் நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துணிக்கைகளை ஒன்று சேர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நனோ துணிக்கைகள் தொகையாக கொண்டு வரும் போது அவை தமது பொறியியல் தன்மையைக் காட்டுகின்றன. உதாரணமாக பாரம்பரிய பொலிமரை நனோ தொழில் நுட்பத்தால் உறுதியூட்டப்படலாம். இவற்றை நாம் உலோகங்களிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.

இவைதான் நான் தேடிக்கண்டு பிடித்தது நனோ தொழில் நுட்பம் பற்றிய ஒரு அடிப்படை அறிவை இது உங்களிற்கு வழங்கி இருக்கம் என நம்புகின்றேன்.

4மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Nice ariticle...
Thanks for your Science based articles

11:32 am  
Anonymous Anonymous மொழிந்தது...

I appriciate your act..
Vaazhka thamizh

1:25 pm  
Blogger murali மொழிந்தது...

தகவலுக்கு நன்றி மயூரேசன்.தொடர்ந்து இதுபோல் விஞ்ஞானம் சம்பந்தமான பதிவுகளை தமிழில் கொடுங்கள். வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1:14 am  
Blogger Jay மொழிந்தது...

முரளி மற்றும் முகமறியா நண்பர்களிற்கு நன்றிகள். உங்கள் ஆர்வம் என்னை ஊக்குவிக்கும்...

4:44 pm  

Post a Comment

<< முகப்பு