மூதூரில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை

நன்றி புதினம்.காம்
மூதூர் அரபுக்கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் அங்கிருந்த பத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.


இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடந்தது.

மூதூர் பகுதியில் நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்பதாயிரம் முஸ்லிம் மக்கள் மூதூர் அரபுக்கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு செறிந்திருந்த மக்கள் மீது வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மக்களின் சரியான விவரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை, மூதூர் இறங்குதுறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் சமர் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2மறுமொழிகள்:

Blogger இளங்கோ-டிசே மொழிந்தது...

:-((((

6:12 pm  
Blogger Jay மொழிந்தது...

என்ன செய்வது தமிழனின் நிலை இன்று இதுதான்.....

2:25 pm  

Post a Comment

<< முகப்பு