தொடர்பாடல் ஒரு அறிமுகம்! (Communication)

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதர்கள் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.

தொடர்பாடல் முறைகளானது மனித வர்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.
• மேளங்கள்
• நெருப்பு
• அங்க அசைவுகள்

பின்னய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கியது. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.

இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றோம். இதன் உச்சக் கட்டமாக இணையத்தை பயன் படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

பொதுவாக நாம் ஏன் தொடர்பாடல் செய்ய விரும்புகின்றோம் என யோசித்துப் பார்த்துண்டா?. பின்வருவனவற்றில் ஒன்றிற்காக அல்லது பலதிற்காக அல்லது அனைத்துக்குமாக.
• எமது எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ள
• திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள
• மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
• பொழுதுபோக்கு மற்றும் நேரம் கடத்த (இது பெண்களுக்கான சிறப்புத் தேவை!!!!)

பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.
1. ஒலி – பேச்சு, ஒலிகளைப் பயன் படுத்தல்
2. காட்சி – படங்கள், குறியீடுகள், நிறங்கள்

தொடர்பாடலுக்கு தேவையான முக்கிய விடயதானங்கள்
1. அனுப்புனர்
2. ஊடகம்
3. பெறுனர்

உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளுங்களேன். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். கடிதத்தை காவிச்செல்லும் தபால் சேவை ஊடகம். கடிதத்தை பெறுவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியை புரிந்து கொள்ளாவிடின் முழு தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. சில ஊடகங்கள் செய்தியை குளப்பும் தன்மைகொண்டவை உதாரணமாக சிற்றலை வரிசை ஒலிபரப்புகள் காலநிலையால் குளம்புகின்றனவே அதைக் குறிப்பிடலாம்.

தொடர்பாடலானது ஒரு திறமை என்றும் சிலர் அது ஒரு கலை பிறவியிலேயே வரவேண்டும் என்றும் கூறுவர். இது சிறிது சிக்கலான கேள்வியே!. இரண்டும் இருந்தால் தான் ஒருவர் சிறந்த தொடர்பாடல் செய்ய இயலும். உதாரணமாக பல மொழிகளை தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்ய கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன் தமிழிலே தமிழனை விட அழகாக தொடர்பாடல் செய்யலாம். இது ஒருவனுடைய குணவியல்பு மனோநிலமை என்பவற்றில் தங்கி இருக்கும்.

எதையும் பகுத்து பார்க்கும் திறமை உடையவர்களும் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர். புதிய மொழிகளை படித்தல், உச்சரிப்புகள், நுட்பங்கள் எல்லாமே இரண்டாம் பட்சமே.

மனிதனின் தொடர்பாடலுக்கான மற்றும் தனித்து இருக்க முடியாமல் இருக்கும் தன்மைக்கு அமேரிக்க ரஸ்ய பனிப்போர் நேரத்தில் நடந்த ஒரு கதையைக் கூறினால் இங்கே தகும்.

அதாவது ஒரு ருசிய ஒற்றன் சி.ஐ.ஏ யிடன் முறையாக மாட்டிக் கொண்டான். அப்போது அவனை பல வழிகளில் கடுமையாக விசாரித்தும் அவன் வாய் திறக்க வில்லை. அப்போது அவன் யாருடனும் பேசமுடியாத இருண்ட சிறைக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டபோது சரியாக இரண்டாவது நாளே தான் பேசத் தயார் எனக் கூறி தான் அமேரிக்கா வந்த நோக்கத்தினை சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தெளிவாகக் கூறிவிட்டான்.

இந்த உதாரணத்தில் இருந்து என்ன தெரிகின்றது மனிதன் தனித்து வாழ முடியாத ஒரு ஜந்து. தொடர்பாடல் இல்லா விட்டால் மீண்டும் மனிதன் கற்காலத்திற்கு போய்விடுவான் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதனால காலாகாலத்திற்கு அம்மாவிற்கோ மனைவியிற்கோ யாராவது நீங்க விரும்புபவர்களிற்கு கடிதம், மின்னஞ்சல் அட்லீஸ் ஒரு காலாவது போட மறக்காதீங்க!!!!

2மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Nice article. Write more in this topic

10:12 am  
Blogger Jay மொழிந்தது...

//Nice article. Write more in this topic //
Thanks I keep on write article like this thanks for your commets.

11:33 am  

Post a Comment

<< முகப்பு