சேவிங் பிரைவேற் றியான் (1998) திரைவிமர்சனம்
நாம் நாளாந்தம் பல திரைப் படங்களைப் பார்க்கின்றோம் ஆனாலும் சில திரைப்படங்களே மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. இதற்கு காரணம் கதையமைப்பு, தொகுப்பு, இயக்கம், இசை, ஒளியமைப்பு என அனைத்து காரணிகளும் சிறப்பாக அமையவேண்டும். இவ்வாறு அனைத்தும் சிறப்பாக அமைந்து அடிமனதை வருடிச்செல்லும் திரைப்படமே ஹொலிவூட்டின் தயாரிப்பான சேவிங் ப்ரைவேற் றியான் (1998).
இத் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க். இவரைப் பற்றி சொல்லத்தேவையில்லை யுராசிக்பார்க், ஏ ஐ, வோர் ஒவ் த வேல்ட், மைனோரிட்டி ரிப்போர்ட் போன்ற திரைப்படங்கள் மூலம் முழு உலகையும் மெய் சிலிர்க்க வைத்த இயக்குனர் நாயகம். திரைப்படத்தின் நாயகன் டாம் ஹாங். இவரும் பிரபலமான ஹொலிவூட் நட்சத்திரம். தற்போது வெளியாகி வசூலில் சக்கைபோடும் த டா வின்சி கோட் எனும் திரைப்படத்தின் நாயகனும் இவரே!.

இரண்டாம் உலகயுத்தம் வரலாற்றிலே மறக்கப்பட முடியாத யுத்தம். இந்த போரினால் உலக நாடுகளின் எல்லைக்கோடுகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டது, பல கோடான கோடி மக்கள் தமது தாயகம் விட்டுப் புலம் பெயர வைத்தது. உலக வல்லரசான பிருத்தானியா தன் நாமத்தை றுசியாவிடமும் அமேரிக்காவிடமும் பறிகொடுத்தது. இதுவே உலகம் சந்தித்த இறுதியான பயங்கர யுத்தம். இந்த திரைப்படத்தின் கதையும் இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கியமான இறுதி கணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

திரைப்படத்தின் ஆரம்பம் காற்றிலே படபடக்கும் அமேரிக்க தேசியக் கொடியுடன் ஆரம்பிக்கின்றது. ஒரு வயோதிபர் போர் நினைவாலயத்தில் தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கல்லறைகளுடாக நடப்பதையும், பின்னர் ஓர் இடத்தில் உட்கார்ந்து உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுவதையும் அவரை தேற்றும் உறவினர்களையும் காட்டுவதுடன் படம் மெல்ல மெல்ல வேகம் கொள்ளத் தொடங்குகின்றது. அந்த வயோதிபரின் நினைவலைகளுடன் எம்மையும் இயக்குனர் 1944 ம் ஆண்டிற்கு அழைத்துச் செல்கின்றார்.
நினைவுகள் மயிர் கூச்செறியும் ஒரு தரையிறக்கத்துடன் ஆரம்பிக்கின்றது. கடல் அலைகளைக கிழித்துக் கொண்டு துருப்புக் காவிகள் விரைகின்றன. சில நிமிடங்களில் தரையிறக்கம் என் படகோட்டி அறிவிக்கின்றான். கடற் பயணத்தின் கடுமை தாங்க முடியாமல் சில வீரர்கள் சத்தி (வாந்தி) எடுக்கின்றனர். காப்டன் மில்லர் (டாம் ஹாங்) தலமையில் தரையிறக்கம் ஆரம்பிக்கின்றது. நோர்மாண்டியின் ஒமாகா கடற்கரையில் அமேரிக்க நேசப் படைகள் தரையிறங்க முயற்சி செய்வதையும் அதை தடுக்க நாசிக்கள் செய்யும் பதில் தாக்குதலையும் அழகாக படம் பிடித்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அமேரிக்க வீரர்கள் தரையிறங்க முடியுமா எனும் ஒரு கேள்வி நம் மனதில் எழுவதைத் தடுக்க முடியாது. போர் களத்தின் ஒவ்வொரு கட்டமும் குறிப்பாக காயமடைந்த வீரர்கள் படும் அவலத்தையும் பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு விடவேண்டும் போல் இருக்கும். இந்த தரையிறக்கத்தை நடத்துவதுதான் மிகப் பெரிய காரியம் என நினைத்திருந்த கப்டன் மில்லருக்கு இதைவிட பெரிய ஒரு பணி தன்மேல் விழப் போகின்றது என்பதைத் தெரிந்து வைத்திருக்க சந்தர்ப்பம் இல்லை.
இதே வேளையில் நான்கு ஆண் பிள்களின் தாயார் தன் மூன்று புதல்வர்களை கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். தற்செயலாக இந்த தகவலை வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பகுதியில் கண்டறிகின்றனர். ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (றியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.
இந்தப் பணிக்கு கப்டன் மில்லர் தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கப்டன் மில்லர் தலமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள் ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது.
நேரம் செல்லச்செல்ல நாமும் மில்லரின் படையனியும் ஏதோ ஒரு பிணைப்பால் இணைக்கப் பட்டு விடுகின்றோம். பல கஷ்டங்களினூடு செல்லும் அவர்கள் துன்பங்களில் அழும்போது நாமும் அழுகின்றோம், சிரிக்கும் போது நாமும் சிரிக்கின்றோம். இதே வேளை ஒரு தனி மனிதனுக்காக எமது உயிரை பணயம் வைக்க வேண்டுமா என ஏனைய வீரர்கள் குழம்புகின்றனர். இந்த இடத்திலேயே கப்டன் மில்லரின் ஆளுமையை அழகாக காட்டப் பட்டுள்ளது. மற்றய வீரர்கள் வேண்டாம் எனும் போது அதை மறுத்து தான் எடுக்கும் முடிவுகளை ஏனைய வீரர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதம் அருமையாக உள்ளது.

றியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தளை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை. முன்னைய பகுதிக்கு எவ்விதத்திலும் குறைந்து விடாமல் பின்னய பகுதியும் மிகப் பரபரப்பாகவே நகர்கின்றது.
இவ்வளவு பேசிவிட்டு திரையின் பின்னணியில் நடந்ததைப் பற்றி பேசாது விடின் அது அடுக்காது. இங்கு பயன் படுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களை இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தும் கிட்டத்தட்ட உலக யுத்தம் இரண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததே. இதைவிட உடைகளிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கில் படத்திற்காக இராணுவச் சீர் உடைகளும் காலணிகளும் தயார் செய்யப்பட்டதோடு அவை போர்களத்தில் பாவிக்கப்பட்டவை போன்ற தோற்றம் பெற விஷேட பொறிமுறைகளிற்கு உட்படுத்தப்பட்டது. டோம் ஹாங் மற்றும் அவருடன் நடிப்பவர்கட்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவர்களிற்கு இராணுவப் பயிற்சி வழங்கிய முன்னாள் இராணுவ அதிகாரி கருத்து தெரிவிக்கையில் நடிகர்கள் யாவரும் பயிற்சிக்காக சாதாரண இராணுவ வீரன் போல் நடத்தப்பட்டனர். இவர்கள் சேற்றிலே உருண்டார்கள், முள்ளுக் கம்பிகளூடாக தவள்ந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு காட்சியும் அங்குலம் அங்குலமாக கதைக்கேற்றவாறு அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த அருமையான படம் என்னை மட்டுமல்ல உங்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. இதனால் தான் என்னவோ பல ஒஸ்கார் விருதுகளையும் இந்தத் திரைப்படம் தட்டிக்கொண்டது.
இதுவே என்னைக் கவர்ந்த ஹொலி வூட் திரைப்படங்களில் இன்றும் முதலிடத்தில் உள்ளது. உணர்வுகளுடன் விளையாடும் எந்தப் பொருளையும் எம்மால் மறக்க முடிவதில்லைதானே???
இத் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க். இவரைப் பற்றி சொல்லத்தேவையில்லை யுராசிக்பார்க், ஏ ஐ, வோர் ஒவ் த வேல்ட், மைனோரிட்டி ரிப்போர்ட் போன்ற திரைப்படங்கள் மூலம் முழு உலகையும் மெய் சிலிர்க்க வைத்த இயக்குனர் நாயகம். திரைப்படத்தின் நாயகன் டாம் ஹாங். இவரும் பிரபலமான ஹொலிவூட் நட்சத்திரம். தற்போது வெளியாகி வசூலில் சக்கைபோடும் த டா வின்சி கோட் எனும் திரைப்படத்தின் நாயகனும் இவரே!.

இரண்டாம் உலகயுத்தம் வரலாற்றிலே மறக்கப்பட முடியாத யுத்தம். இந்த போரினால் உலக நாடுகளின் எல்லைக்கோடுகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டது, பல கோடான கோடி மக்கள் தமது தாயகம் விட்டுப் புலம் பெயர வைத்தது. உலக வல்லரசான பிருத்தானியா தன் நாமத்தை றுசியாவிடமும் அமேரிக்காவிடமும் பறிகொடுத்தது. இதுவே உலகம் சந்தித்த இறுதியான பயங்கர யுத்தம். இந்த திரைப்படத்தின் கதையும் இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கியமான இறுதி கணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

திரைப்படத்தின் ஆரம்பம் காற்றிலே படபடக்கும் அமேரிக்க தேசியக் கொடியுடன் ஆரம்பிக்கின்றது. ஒரு வயோதிபர் போர் நினைவாலயத்தில் தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கல்லறைகளுடாக நடப்பதையும், பின்னர் ஓர் இடத்தில் உட்கார்ந்து உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுவதையும் அவரை தேற்றும் உறவினர்களையும் காட்டுவதுடன் படம் மெல்ல மெல்ல வேகம் கொள்ளத் தொடங்குகின்றது. அந்த வயோதிபரின் நினைவலைகளுடன் எம்மையும் இயக்குனர் 1944 ம் ஆண்டிற்கு அழைத்துச் செல்கின்றார்.
நினைவுகள் மயிர் கூச்செறியும் ஒரு தரையிறக்கத்துடன் ஆரம்பிக்கின்றது. கடல் அலைகளைக கிழித்துக் கொண்டு துருப்புக் காவிகள் விரைகின்றன. சில நிமிடங்களில் தரையிறக்கம் என் படகோட்டி அறிவிக்கின்றான். கடற் பயணத்தின் கடுமை தாங்க முடியாமல் சில வீரர்கள் சத்தி (வாந்தி) எடுக்கின்றனர். காப்டன் மில்லர் (டாம் ஹாங்) தலமையில் தரையிறக்கம் ஆரம்பிக்கின்றது. நோர்மாண்டியின் ஒமாகா கடற்கரையில் அமேரிக்க நேசப் படைகள் தரையிறங்க முயற்சி செய்வதையும் அதை தடுக்க நாசிக்கள் செய்யும் பதில் தாக்குதலையும் அழகாக படம் பிடித்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அமேரிக்க வீரர்கள் தரையிறங்க முடியுமா எனும் ஒரு கேள்வி நம் மனதில் எழுவதைத் தடுக்க முடியாது. போர் களத்தின் ஒவ்வொரு கட்டமும் குறிப்பாக காயமடைந்த வீரர்கள் படும் அவலத்தையும் பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு விடவேண்டும் போல் இருக்கும். இந்த தரையிறக்கத்தை நடத்துவதுதான் மிகப் பெரிய காரியம் என நினைத்திருந்த கப்டன் மில்லருக்கு இதைவிட பெரிய ஒரு பணி தன்மேல் விழப் போகின்றது என்பதைத் தெரிந்து வைத்திருக்க சந்தர்ப்பம் இல்லை.
இதே வேளையில் நான்கு ஆண் பிள்களின் தாயார் தன் மூன்று புதல்வர்களை கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். தற்செயலாக இந்த தகவலை வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பகுதியில் கண்டறிகின்றனர். ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (றியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.
இந்தப் பணிக்கு கப்டன் மில்லர் தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கப்டன் மில்லர் தலமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள் ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது.
நேரம் செல்லச்செல்ல நாமும் மில்லரின் படையனியும் ஏதோ ஒரு பிணைப்பால் இணைக்கப் பட்டு விடுகின்றோம். பல கஷ்டங்களினூடு செல்லும் அவர்கள் துன்பங்களில் அழும்போது நாமும் அழுகின்றோம், சிரிக்கும் போது நாமும் சிரிக்கின்றோம். இதே வேளை ஒரு தனி மனிதனுக்காக எமது உயிரை பணயம் வைக்க வேண்டுமா என ஏனைய வீரர்கள் குழம்புகின்றனர். இந்த இடத்திலேயே கப்டன் மில்லரின் ஆளுமையை அழகாக காட்டப் பட்டுள்ளது. மற்றய வீரர்கள் வேண்டாம் எனும் போது அதை மறுத்து தான் எடுக்கும் முடிவுகளை ஏனைய வீரர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதம் அருமையாக உள்ளது.

றியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தளை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை. முன்னைய பகுதிக்கு எவ்விதத்திலும் குறைந்து விடாமல் பின்னய பகுதியும் மிகப் பரபரப்பாகவே நகர்கின்றது.
இவ்வளவு பேசிவிட்டு திரையின் பின்னணியில் நடந்ததைப் பற்றி பேசாது விடின் அது அடுக்காது. இங்கு பயன் படுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களை இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தும் கிட்டத்தட்ட உலக யுத்தம் இரண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததே. இதைவிட உடைகளிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கில் படத்திற்காக இராணுவச் சீர் உடைகளும் காலணிகளும் தயார் செய்யப்பட்டதோடு அவை போர்களத்தில் பாவிக்கப்பட்டவை போன்ற தோற்றம் பெற விஷேட பொறிமுறைகளிற்கு உட்படுத்தப்பட்டது. டோம் ஹாங் மற்றும் அவருடன் நடிப்பவர்கட்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவர்களிற்கு இராணுவப் பயிற்சி வழங்கிய முன்னாள் இராணுவ அதிகாரி கருத்து தெரிவிக்கையில் நடிகர்கள் யாவரும் பயிற்சிக்காக சாதாரண இராணுவ வீரன் போல் நடத்தப்பட்டனர். இவர்கள் சேற்றிலே உருண்டார்கள், முள்ளுக் கம்பிகளூடாக தவள்ந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு காட்சியும் அங்குலம் அங்குலமாக கதைக்கேற்றவாறு அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த அருமையான படம் என்னை மட்டுமல்ல உங்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. இதனால் தான் என்னவோ பல ஒஸ்கார் விருதுகளையும் இந்தத் திரைப்படம் தட்டிக்கொண்டது.
இதுவே என்னைக் கவர்ந்த ஹொலி வூட் திரைப்படங்களில் இன்றும் முதலிடத்தில் உள்ளது. உணர்வுகளுடன் விளையாடும் எந்தப் பொருளையும் எம்மால் மறக்க முடிவதில்லைதானே???